திருவண்ணாமலை, மார்ச் 3- திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் 2 ஆவது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28), இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நிவேதிதாவின் உறவினர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் இறந்து விட்டார். அவரது காரிய நிகழ்ச்சிக்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். புதன் மாலை வீடு திரும்பிய பிரபாகரன், நிவேதிதா ஆகியோர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தி ருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.