அவிநாசி, மார்ச் 12- அவிநாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் டேக் வாண்டோ போட்டியில் முதலிடம் பெற்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் டேக் வாண்டோ போட்டிகள் திங்களன்று நடைபெற்றது. இதில் 35 தனியார் மற்றும் அரசு பள்ளியைச் சார்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கருவலூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இளையோர் பிரிவில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மல்லிகா பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், டேக்வாண்டோ விளையாட்டு ஆசிரியர் வினோதினி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.