அவிநாசி, மார்ச் 12- அவிநாசியில் செம்மலர் 50ஆம் ஆண்டு பொன்விழாவிற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. செம்மலர் 50 ஆம் ஆண்டு பொன் விழாவை தமிழகத்தில் நான்கு மையங்க ளில் நடைபெற உள்ளது. இதன்ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி செம்மலர் பொன்விழா நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்விழாவை நடத்துவதற்கான வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவேற்பு குழுவின் கௌரவத் தலைவராக தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், தலைவராக ஒன்றிய கவுன்சிலர் பி.முத்து சாமி, துணைத் தலைவர்களாக வேலாயுதம் பாளையம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.சாமியப்பன், முன்னாள் பேரூ ராட்சி கவுன்சிலர் ஆர்.வேலுச்சாமி, வர வேற்புக்குழு செயலாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் எஸ்.வெங்கடாசலம், துணைச் செயலா ளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வர மூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய நிர்வாகி தினகரன், பொருளாளராக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.பழனிசாமி மற்றும் சுமார் 60 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஊடகவியலாளர் அ. குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் செம்மலர் சந்தாவாக திருப்பூர் தெற்கு நகர குழு சார்பில் 45 ஒரு ஆண்டுச் சந்தா மற்றும் மார்க்சிஸ்ட் இதழ் 28 சந்தா, ஊத்துக்குளி கமிட்டி சார்பாக செம் மலர் ஆண்டு சந்தா 10 முதல்கட்டமாக ஒப் படைக்கப்பட்டது.