திருப்பூர், நவ. 3 - திருப்பூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருவது குறித்தும், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயனுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரின் திருப்பூர் நிகழ்வு குறித்து எவ்வித தகவலோ, அழைப்போ இதுவரை நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, அலுவ லகத்திற்கோ வரவில்லை. ஆனால், நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப் பினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். எங்கே இருக்கிறார்? என அரசு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வாயிலாகக் கேட்கிறார்கள். முதல்வர் வரு கிற தகவலை, நிகழ்ச்சிகள் குறித்த விவ ரங்களை அரசு நிர்வாகம் முறைப்படி நாடா ளுமன்ற உறுப்பினருக்கு தெரிவிக்காமல், கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்து வமனை நிர்வாகம் அழைப்பது வேடிக்கை யாகவும், வினோதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி)