திருப்பூர், ஜூலை 1 – இந்தியாவின் சுங்கத் துறையில் கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீனப் பொருட்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலுக்கு செவ் வாயன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பொருட்கள் சுங்கத் துறையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. இதில் சில பொருட்களுக்கு ஏற் கனவே கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது. இப்பொருட்களை விடுவிக்காமல் நிறுத்தி வைத்தால், ஏற்கனவே பாதிப்பைச் சந்தித்து வரும் திருப்பூர் பின்னலாடை ஏற்று மதி தொழில், மேலும் கடும் பாதிப்புகளைச் சந்திக்கும். எனவே அமைச்சர் இப்பிரச் சனையில் தலையிட்டு சுங்கத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீனப் பொருட் களை விரைந்து இங்குள்ள தொழில் துறை யினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள் ளார்.