tamilnadu

img

கெரோனா: திருப்பூரில் 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்- ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

திருப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் உழவர் சந்தை தினசரி மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்கள் மாஸ்க் அணிந்த படி வரவேண்டும் எனவும் கைகளை சுத்தப்படுத்திய பின்பே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூரில் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த ஏரியா மளிகை கடைகளின் தொடர்பு எண்ணை  சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளதாகவும் அதன் மூலம் போன் செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.  
மேலும் திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில்  1156 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை எனவும் கூறினார்.
அதேபோல் சாலையில் அத்தியாவசியம் இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும் அவர் அவ்வாறு செல்பவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
----