tamilnadu

img

மகளிர் உரிமைத் தொகைக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை: அமைச்சர்

திருநெல்வேலி, ஆக.18- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழ கத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக மான பெண்கள் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த வர்களில் சிலரது விண்ணப்பங்கள் பல் வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப் பட்டன. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள், நிரா கரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ண ப்பிக்கலாம் என்றும் இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. 

இதில், “மகளிர் உரிமைத் தொகை (ரூ.1,000) பெறுவதற்கான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும், உடனே அனைவருக்கும் கிடைக்கும், இன்று மற்றும் வருகிற திங்கள், செவ் வாய் ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது” என தெரிவிக்கப் பட்டிருந்தது. 

இந்த தகவல் வாட்ஸ் அப்பில் தீயாக பரவியது. இதை நம்பிய பெண்கள், தமிழ கத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களில் குவிந்தனர். குறிப்பாக, நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி  ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் ஏராளமான பெண்கள் குவிந்த னர். அவர்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர  வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்த னர். இதனை ஏற்க மறுத்த பெண்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் ஆட்சியர் அலுவலகங்க ளில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் பரவி  வருவது பொய்யான தகவல். வேண்டு மென்றே திட்டமிட்டு பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.