tamilnadu

img

மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, டிச.29- குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி  நெல்லை டவுனில் ஜனநாயக வாலிபர் சங்கம் மெழுகு வர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் வை.ராஜேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தாலுகா தலைவர் ஸ்ரீராம், தாலுகா பொருளாளர் கௌதம் உள்ளிட்டோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் நிறைவுரையாற்றினார்.

;