புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி பாப்பாயி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.18 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அறுவை சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மருத்துவ இணை இயக்குனர் சந்திரசேகர், துணை இயக்குனர்கள் மலர்விழி, கலைவாணி, மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.