tamilnadu

img

அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருச்சி மாவட்ட 15-வது மாநாடு கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் மனோகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் வரவேற்றார். கிஆபெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கேசவராஜ், கௌரவ தலைவர் சத்தியமூர்த்தி, தமுஎகச கவிஞர் இளங்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   பின்பு நடைபெற்ற கருத்தரங்கிற்கு பேராசிரியர் அருண்விவேக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜான்சன் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க கல்லூரி மாணவர் கிளை செயலாளர் முகமதுயஸசர் வரவேற்றார். தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராசன் கருத்துரை வழங்கினார். கல்லூரி மாணவர் கிளை தலைவர் கலைவாணி நன்றி கூறினார். செயலாளர் அறிக்கையை மாவட்ட செயலாளர் நடராசன் வாசித்தார். பொருளாளர் அறிக்கையை மாவட்ட பொருளாளர் கோகுல் சமர்ப்பித்தார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மான ங்களை முன்மொழிந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் பேசினார். மாவட்ட இணை செயலாளர் மாணிக்கதாய் நன்றி கூறினார்.