tamilnadu

img

பழங்குடியினர் போராட்டம் ஒத்திவைப்பு

கரூர், மே 31-அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யம் தாலுகாவில் உள்ள இருளர்கள் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் இதுவரையில் வழங்காது இருக்கும் தமிழக அரசை கண்டித்து பழங்குடி இருளர்கள் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பின் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.பேச்சுவார்த்தையில், உடனடியாக இருளர் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ், இருப்பிடத்திற்கான பட்டா அனைத்தும் தருவதாக அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்ததின் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் சரவணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாநில துணைச் செயலாளர் ஸ்டாலின், மாவட்டப் பொருளாளர் உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.