tamilnadu

img

‘டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’

கும்பகோணம், ஜுன் 4-தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருவிடைமருதூர் வட்ட கிளை மூன்றாவது மாநாடு தோழர் பி.ஆர். நினைவரங்கத்தில் நடைபெற்றது.மூத்த உறுப்பினர் உப்பிலி சங்க கொடியை ஏற்றி துவக்கிவைத்தார். வட்ட தலைவர் கே.சிவராமன் தலைமை ஏற்றார்.மாவட்ட இணை செயலாளர் ஆர்.ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி துவக்க உரை ஆற்றினார் வட்டச் செயலாளர் எஸ்.மூர்த்தி வேலை அறிக்கையையும் வட்ட பொருளாளர் சிவசண்முகம் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். சங்க மாவட்ட செயலாளர் ஆர் ராஜகோபாலன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் தலைவர்ஆர்.கலியமூர்த்தி நிறைவுரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னதுரை நன்றி கூறினார். மாநாட்டில் கே.சிவராமன் தலைவராகவும், எஸ்.மூர்த்திசெயலாளராகவும், ஆர் .பன்னீர்செல்வம் பொருளாளராகவும், ஜி.சண்முகம், சிவசண்முகம் துணைத் தலைவர்களாகவும், ஆசைத்தம்பி, பி.திருநாவுக்கரசு இணைச் செயலாளர்களாகவும், இராமலிங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர்திருவிடைமருதூர்  தாலுகா  அலுவலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  தற்போது தேவைப்படும் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று  போன்ற இதர சான்றுகள் வழங்க காலதாமதப்படுத்தாமல் உடனுக்குடன்  வழங்கப் பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.