திருவாரூர் செப்15- கருவூலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை களை தனியார்மயமாக்கம் போக்கை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 13-வது மாநாடு திருவாரூரில் தோழர்.ஏ.ராமசாமி நினைவரங்களில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொறுப்புத் தலைவர் எம்.ராஜமாணிக்கம் தலைமையேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் சி.பிரகாஷ் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.சின்னையன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வெ.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி ஆகியோர் அறிக்கைகளை சமர்பித்தனர். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வம் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட இணைச் செயலாளர் அ.தனபால், மாநில செயற்குழு உறுப்பினர் டி.மணிவண்ணன் ஆகியோர் தீர்மானங்களை வழிமொழிந்தனர். மாநில செயலாளர் எம்.சௌந்தரராஜன், மாநில முன்னாள் துணைத் தலைவர் கே.அகோரம், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஜெ.விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பணி ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.புஷ்பநாதனுக்கு மாநாட்டில் சிறப்பு செய்யப்பட்டது. மாவட்ட பொறுப்புத் தலைவர் எம்.ராஜமாணிக்கம் தலைமையில் மகளிர் பேரவை நடைபெற்றது. மாநாட்டில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். எம்.ராஜமாணிக்கம்(மாவட்ட தலைவர்), வி.சோமசுந்தரம்(மாவட்ட செயலாளர்), செ.பிரகாஷ் (மாவட்ட பொருளாளர்), மாவட்ட இணைச் செயலாளர்கள் எ.தனபால், டி.மணிவண்ணன், எஸ்.சுதாகர், கே.எஸ்.செந்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.சிவகுமார், வி.சி.குமார், எம்.மூர்த்தி, சுபலெட்சுமி, தணிக்கையாளர்கள் உ.சண்முகம், எஸ்.மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் காவிரி டெல்டா மாவட்ட ங்களில் 12 இடங்களில் செயல்படுத்தும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதியில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் ஏற்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிர்ணய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நீடாமங்கலத்தில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறு வதால் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும். திருவாரூரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும், திருவாரூர்- காரைக்குடி இரயிலை விரைவு இரயிலாக மாற்ற வேண்டும், மன்னார்குடி– பட்டுக்கோட்டை புதிய இரயில்வே பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.