அரசு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் டிசம்பர் மாதம் வரை 42 சிறப்பு முகாம்கள் நடத்தப்படு கின்றன. சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது, புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஆகியவற்றிற்கு இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் படுவர். இச்சிறப்பு மருத்துவ முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கும்பகோணத்தில் 6 புதிய பேருந்துகள் இயக்கம்
தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலை யத்தில் அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்ட லத்தில் 6 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. காரைக்கால் மற்றும் குமுளி ஆகிய ஊர்களுக்கு 6 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 107 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ராம நாதன், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 8- புதுக்கோட்டை கறம்பக்குடி வட்டம் பிலாவிடுதி கிரா மத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மனு செய்து பயனடையுமாறு ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித் துள்ளார்.
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உயர் சிகிச்சை
புதுக்கோட்டை, ஜூலை 8- புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 அரசு மருத்துவமனைகளில் 10,195 நபர்களுக்கு ரூ.13.65 கோடி மதிப்பிலும், 8 தனியார் மருத்துவமனைகளில் 4,441 நபர்களுக்கு ரூ.7.78 கோடி மதிப்பிலும், 7 நோய் கண்டறிதல் மையங்களில் 16,042 பேருக்கு ரூ.2.23 கோடி மதிப்பில் நோய் கண்டறிதல் பரி சோதனைகளும் என பல்வேறு மருத்துவசிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 30,678 நபர்களுக்கு ரூ23.66 மதிப்பில் பல்வேறு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை, ஜூலை 8- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் புதுக் கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகனப் பராமரிப்பு, கட்டுமானம், அழகுக்கலை, வேளாண்மை, ஆபரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நடவடிக்கை யும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் www.tbskill.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது பயிற்சி நிறுவனங்களை நேரில் அணுகலாம். பயிற்சி காலத்தில் போக்குவரத்துச் செலவாக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் பயிற்சியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திறன் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி திங்கள்கிழமை துவக்கி வைத்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி பங்கேற்றனர். இதே போல் திருவாரூரில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் த. ஆனந்த் தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலைத் துறையின் நுண்ணீர் விழிப்புணர்வு முகாம்
சீர்காழி, ஜூலை 8- நாகை மாவட்டம் சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கான நுண்ணீர் மற்றும் தெளிப்பு நீர் விழிப்புணர்வு முகாம் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்றது. தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னி தலைமை வகித்தார். கொள்ளிடம் தோட்டக்கலை அலுவலர் சுகன்யா வரவேற்றார். உதவி அலுவலர்கள் செல்வராஜ், கல்யாணம், சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுண்ணீர் பிரதிநிதி ஸ்ரீதரன், இத்திட்ட விளக்கவுரை யாற்றினார். முகாமில் விவசாயிகளிடமிருந்து நுண்ணீர் பாசன கருவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமில் மத்திய அரசின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் வட்டாரத்திற்கு 2019-20 ஆம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் மற்றும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு பாச னத்திற்கு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி வகுப்பு துவக்க விழா
தஞ்சாவூர், ஜூலை 8- அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை ஹோம் சயின்ஸ்(மனையியல்) பாடப்பிரிவு அறிமுகம் மற்றும் முதலாம் ஆண்டில் இணைந்த மாணவி களுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்(பொ) எம்.முகமது முகை தீன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் என்.ஏ. முகமது பாருக் முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவை தொடங்கி வைத்தும், புதிய மனை யியல் பயிற்சிக் கூடத்தை திறந்தும் வைத்தார். கல்லூரிப் பேராசிரியை ஏ.ஆர்த்தி, ‘மனையியல் கற்பதன் நோக்கம்’ என்ற தலைப்பிலும், பேராசிரியை ஆரிபா, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து’ என்ற தலைப்பிலும் பேசினர். முன்னதாக பேராசிரியர் மேஜர் பி.கணபதி வரவேற்றுப் பேசினார். பேரா சிரியைகள் என்.சித்ரா, கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பேராசிரியை எம்.சுமதி நன்றி கூறினார்.