ஊரகத் துறை அலுவலர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவி லான பயிற்சி பட்டறை மற்றும் திறந்த வெளி கழிப்பிட மற்ற மாவட்டமாக தொடர்ந்து பேணுவதற்கான பயிற்சி கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஐஏஎஸ் அலுவல ரான கஜா புயல் மறுசீரமைப்பு அலுவலர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் மந்திராசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதி பெற அறிவுறுத்தல்
கும்பகோணம், ஜூன் 19- கும்பகோணத்தில் ஆட்டோக்களில் அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் புதனன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை திடீர் ஆய்வு செய்தார். அதில் அதிக குழந்தைகளும் புத்தகங்க ளில் வெளியில் இடையூறாக தொங்க விட்டு சென்ற நான்கு ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இனி பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக் கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகே குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த நட வடிக்கைக்கு பெற்றோர்களும் கல்வி நிர்வாகமும் ஒத்து ழைப்பு தர வேண்டும். இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு நடைபெறும் என அருணாச்சலம் தெரிவித்தார்.
மனுக் கொடுக்கும் போராட்டம்
அரியலூர், ஜூன் 19- தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் எ.தங்கராசு தலைமையில் நடைபெற உள்ளது மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தமிழ்நாடு விவசாய சங்க துணைத்தலைவர் என்.பழனிவேல் ஒன்றிய செயலாளர் வி.தங்கையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொள்ள உள்ளனர்.