tamilnadu

பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாகர்கோவில், மே 17- நாகர்கோவிலில் பிஎஸ்என்எல்சார்பில்பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, பிஎஸ்என்எல் நாகர்கோவில் தொலை தொடர்பு மாவட்டப்பொது மேலாளர் சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அனைத்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாள்களில் ஒரு வார காலம் தொலைதொடர்பு(டெலிகாம்) குறித்த அடிப்படை தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி நாகர்கோவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தொடர்ந்து வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டும் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில்உள்ள தொலைபேசி நிலையத்தில் மே 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல்தொடங்கி நடைபெற உள்ளது.இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நாகர்கோவில் தொலைபேசி நிலையம் வந்து கல்லூரிஅடையாள அட்டைநகல் மற்றும் பயிற்சிக்குரிய கட்டணத்தை செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, உதவிக் கோட்டப் பொறியாளர் ஓ.மணியை, 04652 - 279999 அல்லது 9486102609 ஆகியஎண்களில் தொடர்பு கொள்ளலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.