தொழிலாளி தற்கொலை முயற்சி
சீர்காழி, ஜூலை 1- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வைரவனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் ஏசுதாஸ்(42), கூலித் தொழிலாளி. இவர் ஊராட்சி செயலாளரிடம் 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஒரு மாதத்துக்கும் மேலாக ஏசுதாசுக்கு 100 நாள் வேலை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. இந்நிலையில் அப்பகுதியில் 100 நாள் வேலை நடை பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்று ஏசுதாஸ் பணித்தள பொறுப்பாளரை பார்த்து ஏன் எனக்கு வேலை தர மறுப்பதாக கேட்டு பிரச்சனை செய்தார். இதில் பணித்தள பொறுப்பாளர் ஏசுதாஸை திட்டியதாகக் கூறப்படுகிறது. இத னால் மனமுடைந்த ஏசுதாஸ் வீட்டிற்கு வந்து உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெண் தொழிலாளிக்கு பாராட்டு
சீர்காழி, ஜூலை 1- நாகை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் உள்ள எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளை பராமரித்து கவனித்துக் கொள்ள ஆயாக்கள் ஆறு பேர் வேலை பார்க்கின்றார்கள். அவர்களுள் கௌ்ளிடம் ஒன்றியம் அருகே நல்லவினாயக புரம் தெருவைச் சேர்ந்த அருமகண்ணு மனைவி இந்தி ராணிக்கு பள்ளியில் இறை வணக்கக் கூட்டத்தில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இந்திராணி எனும் ஆயா கடந்த வெள்ளியன்று பணியில் இருக்கும் போது பள்ளி வளாகத்தில் பவுன் தோடு ஒன்றைக் கண்டெடுத்து பள்ளி முதல்வரிடம் கொடுத்தார். அகப்பட்ட தைச் சுருட்டிச் செல்லும் இந்நாளில் ரூ.1000 மதிப்புள்ள பவுன் நகையைக் கொடுத்ததைக் கண்ட பெற்றோரும், ஆசிரி யர்களும் ஆச்சரியமுடன் வியந்து பாராட்டினர். மேலும் மறு நாள் பள்ளியில் நடைபெற்ற இறை வணக்கக் கூட்டத்தில் இந்திராணியின் நேர்மையை, பள்ளி நிர்வாக அலுவலர் எம்.தங்கவேலு, முதல்வர் கே.தங்கதுரை மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
நடமாடும் வங்கி ஏடிஎம் துவக்கம்
திருவாரூர் ஜூலை 1- திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஐஓபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் இயந்திர வாகனத்தை ஆட்சியர் த.ஆனந்த் துவக்கி வைத்தார். ஐஓபியின் முன்னோடி மாவட்டங்களான 13 மாவட்டங்களிலும் இந்நடமாடும் ஏ.டி.எம் இயந்திர வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் ஏ.எழிலரசன், ஐஒபி வங்கியின் முதன்மை மேலாளர் ஜீ.செந்தில்குமார். ஊரக சுய தொழில் மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கொள்முதல் நிலையம் திறப்பு
புதுக்கோட்டை, ஜூலை 1- புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பரு வம் 2018-19 முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் தற்போது ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரும் 5-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறு வடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெறலாம்
திருவாரூர், ஜூலை 1- 2019-20 ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி உதவித் தொகை வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாய், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்காயி ரம் ரூபாய், இளங்கலை பட்டபடிப்பிற்கு ஆறாயிரம் ரூபாய், முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்நுட்ப கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ஏழாயிரம் ரூபாய் என ஓராண்டிற்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். மேலும் பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாய், இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.ஐந்தாயிரமும், முது கலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப கல்விக்கு ஆறாயிர மும் வழங்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உரிய சான்றுகளுடன் பள்ளி தலைமையாசிரி யர் அல்லது கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ் பெற்று ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.6 கீழ்தளத்தில் 31.12.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.