tamilnadu

img

பழுதான டிரான்ஸ்பார்மரை மாற்றுக! மின்வாரிய அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 14- திருச்சி மாவட்டம் சமயபுரம் துணைமின் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் டிரான்பார்மர் பழுந்தடைந்தது. இதையடுத்து மண்ணச்சநல்லூர் பகுதிகளுக்கு புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் மிகக் குறைந்த மின் அழுத்தத்தில் வருவதால் விவசாயம் உள்ளிட்ட பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் சமயபுரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை மாற்றப்படவில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக டிரான்ஸ்பார்மரை மாற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் புதனன்று மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  மேற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் பேசினார்.