பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாராமல் விடப்பட்டதால் தண்ணீர் வடிய வழியின்றி வாய்க்காலில் நிரம்பி வந்த தண்ணீர் குவியான்பள்ளம் கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்த நிலையில், குவியான்பள்ளம் கிராமத்தில் உள்ள வேம்பு (65) என்பவருக்குச் சொந்தமான குடிசை வீட்டின் மண்சுவர் திங்களன்று இரவு இடிந்து விழுந்தது. ஆயினும் வீட்டிற்குள் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.