tamilnadu

img

மல்லிப்பட்டினத்தில் துறைமுகம் திறப்பு

தஞ்சாவூர், ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வட்டம் மல்லிப்பட்டினத்தில், துறைமுகம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய துறைமுகத்தை திங்கள்கிழமை காணொ லிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  மல்லிப்பட்டினத்தில் படகு அணை யும் துறை வடக்கு மற்றும் தெற்கு 440 மீட்டர், எல் வடிவிலான படகு அணை யும் துறை வடக்கு மற்றும் தெற்கு 510 மீட்டர், படகு பழுதுபார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டிடம், மீன் ஏலக் கூடங்கள் 2, வலை பின்னும் கூடங்கள் 2, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரண்டு, சிமெண்ட் சாலைகள், மழை நீர் வடிகால்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் துறைமுகப் பகுதியில் தூர் வாரும் பணி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், துறைமுகத்தில் 213 விசைப் படகுகளும், 102 வல்லம் படகுகளும், 967 பாரம்பரிய மீன்பிடி படகுகளும் நிறுத்தம் செய்வதற்கு வகை செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 249 மீனவர்கள் நேரடி யாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுவர். புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகா தாரமான முறையில் விற்பனை செய்வ தற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பி னர்கள் பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி மா.கோவிந்தராசு, முன்னாள் மாவட்ட செயலாளர்  இரா. கார்த்திகேயன், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர்  எஸ்.நீல கண்டன், ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ. மதிவாணன், பட்டுக்கோட்டை சுப்பி ரமணியன், நகரச் செயலாளர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், அதி ராம்பட்டினம் பிச்சை, அட்மா எஸ்.வி.பி. ரவிசங்கர், கூட்டுறவு சங்கத் தலை வர் ஆர்.பி.ராஜேந்திரன், சேதுபாவா சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன், மீனவர் சங்க நிர்வாகிகள் சின்னப்பிள்ளை, மீனவராஜன், ஜமாத் தலைவர் அல்லாபிச்சை கலந்து கொண்டனர். 

முன்னதாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீன வர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படு வதாகக் கூறி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமையில் மீனவர்கள் துறைமுக திறப்பு விழாவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தூண்டில் வளைவு அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர், முத லமைச்சரிடம் பேசி இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்த ராசு கூறியதையடுத்து, புறக்கணிப்பை கைவிட்டு மீனவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.