மண்ணச்சநல்லூர், மே 10-திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் பல நாட்களாக பணி நேரத்தில் சரி வர பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக ஆய்வாளர் இம்மானுவேல் ராயப்பன், உதவி காவல் ஆய்வாளர் அய்யப்பன், எழுத்தர் விஜயராகவன், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், ராஜா ஆகியோரை திருச்சி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உடனடியாக அதிரடி உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட எஸ்.பி.,ஜியாவுல் ஹக். மேலும் மாவட்டத்தில் பணிக்கு சரி வர வராமல் ஒழுங்கீனமான முறையில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.