tamilnadu

img

திருச்சி, புதுக்கோட்டையில் உள்ளாட்சித் துறை ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்ப டையில் அனைத்து ஓஎச்டி ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரியர்ஸ் தொகை 1.10.2017 முதல் வழங்க வேண்டும். நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்திட மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் திங்களன்று ஆட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கை முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி னர். ராமசாமி, முருகேசன், சித்திரைமணி, பழனியாண்டி, செல்வம், சுப்பிரமணி, வாசு, மாரியாயி, வின்சென்ட் ஜோஸப், வெங்கடாசலம், ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆட்சியர் அலுலவ கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாநிலத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முகமதலி ஜின்னா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தில், அரசாணைப்படி ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் ரூ.11 ஆயிரத்து 236-ம், துப்பரவு தொழிலா ளர்களுக்கு மாத ஊதியம் ரூ.9 ஆயிரத்து 934-ம் மற்றும் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கோரிக்கை கள் அடங்கிய மனு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் அளித்தனர்.