tamilnadu

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

தஞ்சாவூரில் பதிவான வாக்குகள் விவரம்


தஞ்சாவூர், ஏப்.18-தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 65.97 சதவீதம் பதிவானது. தஞ்சாவூர்நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு, மன்னார்குடி -67.3ரூ, திருவையாறு- 67.5ரூ, தஞ்சாவூர்- 61.39ரூ, ஒரத்தநாடு- 69.27ரூ, பட்டுக்கோட்டை- 62.42ரூ, பேராவூரணி- 68.86ரூ என பதிவானது. 5 மணி நிலவரப்படி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் அதிக சதவீதமும், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் குறைந்த அளவும் வாக்குகள் பதிவாகின. 


மின்சாரம் தாக்கி ஒருவர் பலி


புதுக்கோட்டை, ஏப்.18-கழனிப்பட்டியைச் சேர்ந்தவர் எம்.கணேசன்(40). இவர், வயல்களில் கிட்டி வைத்து எலி ஒழிப்பு தொழில் செய்து வந்தார். இவர், மோளுடையான்பட்டியில் உள்ள இளங்கோவன் வயலில் எலி கிட்டி அமைத்துள்ளார். இதை பார்ப்பதற்காக சம்பவத்தன்று வயலில் நடந்து சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மழையூர் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

;