tamilnadu

img

உணவுப் பாதுகாப்பு முகாம்

நாகப்பட்டினம், மே23-நாகப்பட்டினம் அவுரித்திடலில், வியாழக்கிழமை, நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கோடைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் முகாமுக்குத் தலைமை வகித்தார். புள்ளியல் துறை சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ப.அந்துவன்சேரல் முகாமைத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அரசு செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பா.இராணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நாகைக் கிளைத் தலைவர் என்.பாபுராஜ் ஆகியோர் பேசினர். உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் நன்றி கூறினார்.