tamilnadu

img

நுகர்பொருள் வாணிபக் கழக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.3- அனைத்து மண்டலங்களிலும் தலைமை அலுவலகம் மூலம் உதவி மேலாளர் மற்றும் உதவியாளர் நேரடி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்களுக்கு இந்திய உணவு கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் செவ்வாய் அன்று திருச்சி மண்டல மேலாளர் அலுவல கம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார்.  மாநில பொதுச்செயலாளர் புவ னேஸ்வரன், மண்டல செயலாளர் ராசப்பன், குட்ஷெட் சுமைப்பணி  சங்க செயலாளர் சிவக்குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தில் அலுவலக ஊழியர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் பருவகால பணியாளர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.