tamilnadu

img

காஷ்மீரை சிதைத்த மத்திய அரசுக்கு கண்டனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.7- மத்தியில் ஆளும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடாளுமன்றத் தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை யை பயன்படுத்திக் கொண்டு மக் களை பாதிக்கும் மிக மோசமான மசோதாக்களை நிறைவேற்றி வரு கின்றது. ஜனநாயகத்திற்கு விரோ தமாக சர்வாதிகார சிந்தனையோடு செயல்பட்டு வரும் பாஜக அரசு உச்சகட்டமாக காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கபளீகரம் செய்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளிக்காமல் விடுதலை இந்தியாவில் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியான 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை நீக்கி கபளீகரம் செய்துள்ளது. இதன் மூலமாக அரசே பிரிவினையை ஏற்படுத்தி இந்திய நாட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியின் இந்த பாசிச நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண் டித்து, நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்தி வருகிறது. 

திருச்சிராப்பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மணப்பாறை ஒன்றியக்குழு சார்பில் புதனன்று பெரியார்சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மணப் பாறை வட்டச் செயலாள ராஜ கோபால் தலைமை வகித்தார். வையம்பட்டி ஒன்றியச் செயலா ளர் வெள்ளைச்சாமி, மருங்காபுரி ஒன்றியச் செயலாளர் தியாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சிதம்பரம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வடக்குழு உறுப்பினர்கள் கண் ணன், ஷாஜகான், சீனிவாசன், கோபாலகிருஷ்ணன், கருப்பையா, முத்துச்சாமி, சுரேஷ், சரஸ்வதி, ராஜாமணி ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றி யம் சார்பாக ஒன்றியச் செயலாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி. முருகேசன், எஸ்.முருகேசன், டி. நல்லையன், குமரேசன், சேகர், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி புறநகர் மாவட்டச் செய லாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.சுப்ர மணியன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சம்பத், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சியின் கிளை செயலாளர்கள், மூத்த தோழர்கள், மாதர் சங்கம், சிஐ டியு உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்
புலிவலம் கடைவீதியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.இடும்பை யன் தலைமையில் கண்டன இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கண் டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், சிபிஎம் தலைவர்கள் கே. ரெங்கசாமி, எஸ்.ராமசாமி, எஸ். சேகர் (விதொச), கிளைச் செயலா ளர்கள் வி.பாலு (விஷ்ணுதோப்பு), ஆர்.சோமு (புலிவலம்) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி
பாஜக அரசை கண்டித்து மன் னார்குடி நகரக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். தமு எகச மாவட்டத் தலைவர் ஆர்.தாமோ தரன், நகரக்குழு உறுப்பினர்கள் ஜி. ரெகுபதி, கே.அகோரம், சிஐடியு டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் டி.முருகையன் சிறப்புரையாற்றினார். நகரக் குழு உறுப்பினர் எம்.சிராஜுதீன், பி. கலைச்செல்வி, ப.தெட்சிணா மூர்த்தி, நகரச் செயலாளர்கள்-உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.

முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி யன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்தி ரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, எல்.டி.வீரசேகரன், என்.ராஜேந்திரன், சி.செல்லதுரை உள்ளிட்டோர் பேசினர். கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தமிழ்மணி சிறப்புரையாற்றி னார்.

சீர்காழி
சீர்காழி பழைய பேருந்து நிலை யம் ஸ்டேட் பேங்க் எதிரே நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் கே. நாகையா தலைமை வகித்தார். வட்டச் செயலாளரும் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான சி.வி.ஆர்.ஜீவானந்தம், மரு வத்தூர் கிளைச் செயலாளர் கே. அசோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.