tamilnadu

img

இப்தார் நோன்பு நிகழ்ச்சி

அறந்தாங்கி, மே 26-அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செலக்சன் கல்விக்குழுமங்களின் சார்பாக ஏழாம் ஆண்டாக இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சி.கண்ணையா தலைமை வகித்தார். அறந்தாங்கி காவல் ஆய்வாளர் ரவீந்திரன், நகராட்சி ஆணையர் வினோத், ரோட்டரி மாவட்ட ஆளுநர், வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், ரோட்டரி கிளப் தலைவர் அபுதாலிப், தி போர்ட் சிட்டி ரோட்டரி தலைவர் கவிகார்த்திக், அறந்தாங்கி ஜமாத்தார்கள். மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் க.சுரேஸ்குமார் வரவேற்றார். நிறைவாக பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.