சர்வதேச மகளிர்தினத்தையொட்டி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி, திருநங்கைகள் வள மையம் இணைந்து நடத்திய சாதனைப் சிங்கப் பெண்கள் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தார். மதுரை காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, திருநங்கைகள் வள மைய தலைவர் பிரியாபாபு, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் ஆர்.சசிகலா உள்ளிட்ட 100 பேர் கௌரவிக்கப்பட்டனர்.