tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக 15 இளைஞர்கள்

குடவாசல்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள தென்பரை கிராமத்தில் 15 இளைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் என்.சண்முகவேல் தலைமை தாங்கினார். கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலையில் தென்பரை கிராமத்தில் உள்ள 15 இளைஞர்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு வரவேற்பு அளித்து சிவப்பு துண்டு அணிவிக்கப்பட்டது.  இந்த மண்ணில் தான் முதன் முதலாக பண்ணை அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஆர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பி.சீனிவாச ராவ், இந்தத் தென்பரையில் தான் முதன் முதலில் கட்சி கிளையை துவக்கியவர். அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்த மண்ணிலிருந்து இளைஞர்களாகிய நீங்கள் வந்துள்ளீர்கள் என்று கூறி கட்சி ஸ்தாபனம் முறையை பற்றி விளக்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி.

;