திண்டுக்கல், செப்.28- கோவில் நிலங்களில் காலங்கால மாக சாகுபடி செய்யும் குத்தகை விவ சாயிகளை வெளியேற்ற முயற்சிக் கும் இந்துசமய அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அடிமனை பயனா ளிகள் குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் சனிக்கிழமையன்று திண்டுக் கல்லில் நடைபெற்றது. இக்கூட்டட் ்திற்கு மாநிலத் தலைவர் பி.செல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சாமிநடராஜன், மாநில பொருளாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலம் முழுவதும் பல தலை முறைகளாக கோவில் பெயரில் உள்ள நிலங்களில் குத்தகை சாகு படி செய்யும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றும் நட வடிக்கையாக குத்தகை நிலங்களை ஏலம்விடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையினர் செயல் பாட்டை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் காலம் காலமாக குத்தகை விவசாயம் செய்யும் விவசா யிகளிடம் குத்தகை தொகையை மட்டுமே பெற்றுக்கொண்டு, அவர் களை குத்தகை சாகுபடியாளர்க ளாகவே நீட்டித்திட வேண்டும். இனாம் விவசாய நிலங்கள் அனைத் தும் கோவில் நிலங்கள் என்ற பெயரில் அறநிலையத்துறை தலையீடு செய்வதை கைவிட வேண்டும்.
இந்து சமய அறநிலையத் ்துறைக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு அடி மனையை சொந்தமாக்கி பட்டா அளித்திட இந்து சமய அறநிலை யத்துறையும், தமிழக அரசும் முன்வர வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் கோவிலுக்கு சொந்தமான அடிமனைகளில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு பட்டா வழங்கு வதாக கடந்த ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை 318-ஐ செயல்படுத்திட உடனடியாக தமிழ்நாடு அரசு நீதி மன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திட வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதை தடை செய்யாதே
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் பெயரில் அடிமனைகளில் உள்ள பயனாளிகளின் பெயரில் மின் இணைப்பு பெறுவதை தடைசெய் வது தவிர்க்கப்பட வேண்டும். பயனா ளிகளின் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்வது, அடிமனைகளை குடியிருப்பு, வணிகம் என அளந்து வாடகை நிர்ணயிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.