tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 37- வது அமைப்பு தினவிழா

தருமபுரி, மே 7-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 37 ஆவது அமைப்பு தின கொடி யேற்ற நிகழ்வு எழுச்சியுடன் நடை பெற்றது. தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கொடியேற்று  நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஏ. சேகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடியினை மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம் மேளன கொடியை மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.இளவேனில் ஆகி யோர் ஏற்றி வைத்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் பி.பிரபாகரன் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட உதவி கோட்டப் பொறியாளர் நெடுஞ் சாலைத் துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட் டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகு திகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் கொடி ஏற்றப்பட்டது. இந்நி கழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், கருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்நிகழ்வில் மத்திய - மாநில அரசுகளின் மக்கள் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பை கை விட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். கார்ப்பரேட் பெரும் முத லாளிகளுக்கு சலுகை மேல் சலுகை அளிக்கும் போக்கை கைவிட வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.