tamilnadu

img

பாப்பிரெட்டிப்பட்டியில் மரவள்ளிக்கிழங்கு அரவை தொழிற்சாலை அமைத்திடுக

தருமபுரி, ஆக. 6- பாப்பிரெட்டிப்பட்டி யில் அரசு கூட்டுறவு மர வள்ளிக்கிழங்கு அரவை  தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி  விவசாயிகள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்திலே அதிக மாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வது தருமபுரி, சேலம் மாவட்டங்கள் தான்.  இந்த மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற மண் உள்ளதால்  விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகு படியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளி கிழங்கு சாகுபடி 10 மாத பயிராகும். மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி, இறவை ஆகியவற்றில்  மூலம் மரவள்ளி கிழங்கு  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய ரூ.15ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 100 மூட்டை மரவள்ளி கிழங்கு விளைகிறது. ஒரு மூட்டை ரூ.200 முதல் ரூ.300 வரை கிடைக்கிறது.இங்கு விளைவிக்கும் மரவள்ளிக் கிழங்கிற்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறு கின்றனர். இந்த மரவள்ளிக்கிழங்கை பாப்பி ரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் ஆத் தூரில் உள்ள தனியார் ஆலைக்கு தான்  அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இங்கு ஸ்டார்ச், மைதா, ஜவ்வரிசி  போன்ற பொருட்கள் தயாரிக்கப்படு கின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலாளர் சி.வஞ்சி கூறுகையில்,  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் ஆகிய பகுதி களில் மானாவாரி, இறவை மூலமாக   மரவள்ளிக்கிழங்கு சாகுபடி அதிகளவில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.  இதில் பெரும் பகுதி விவசாயிகள்  சாகுபடி செய்ய கடன் வாங்குகின்றனர்.  மரவள்ளிக்கிழங்கு விளைந்து அறு வடைக்கு வரும் போது இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு சென் றாலும் குறைந்த விலைக்குத்தான்  வாங்கு கின்றனர். எனவே விவசாயிகள், தனியார் ஆலை  நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவை இணைந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும்.  மேலும் விவசாயிகளின் நலன் கருதி தமிழ அரசு கூட்டுறவு மரவள்ளிக்கிழங்கு அரவை தொழிற்சாலை அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தார்.