தஞ்சாவூர், ஜூன் 4-காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சியினர், அமைப்புகள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், டெல்டாவைபாலைவனமாக்கும் ஹைட்ரோகார் பன் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கைவிடவேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முழக்கங்களை எழுப்பினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனிவேலு, ஆர்.மனோகரன், வெ.ஜீவகுமார், சின்னை பாண்டியன், எம்.மாலதி, என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர்சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் என்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் கே.அபிமன்னன், சரவணன், திருவையாறு ராஜா, எம்.ராம், நம்பிராஜன், அருளரசன், அரவிந்தசாமி, விதொச ஆர்.வாசு, எம்.செல்வம், எஸ்.கந்தசாமி, கே.செந்தில்குமார், சி.நாகராஜன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுஉறுப்பினர் கோ.பழனிசாமி, மாவட்டச்செயலாளர் மு.அ.பாரதி உள்ளிட் டோர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் அமர்சிங்,தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், மக்கள்அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் பெ.காளியப்பன், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் கூறியதாவது:
தமிழகஅரசு மக்களுடைய கருத்துக்களை கேட்காமலேயே காவிரிடெல்டாவில் குழாய்களை பதித்து வருகிறது. இந்த செயல் மிகப்பெரிய துரோகம். இந்த துரோகத்துக்கு அவர்கள் பரிகாரம் தேட வேண்டுமென்றால், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி, மக்களுக்கு எதிரான, அறிவித்துள்ள திட்டங்களை தமிழ்நாடு அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை குறி வைத்தது போல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடுபவர்களையும் ஆளும் அரசாங்கம் குறி வைக்கிறார்கள். அதற்காகநாங்கள் கவலைப்படாமல் டெல்டா மாவட்டங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.