சென்னை, மே 26 - சதுரங்கவேட்டை போன்று பல நூறு படங்கள் வந்தாலும் ஒரு சிலர் திருந்தபோவதில்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமா்ந்து போவது தொடர்கிறது. பொதுத்துறை வங்கிகளில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. பிஎப் மீதான வட்டி விகிதமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஒன்றிய மாநில அரசுப்பணிகளில் ஒய்வுபெற்றோர், தனியார் நிறுவனங்களில் ஒய்வு பெற்றோர், தங்களுக்கு ஓய்வுகாலத்தில் கிடைத்த பணத்தை மகன் மகள் திருமணத்திற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் வைத்திருக்கும் பணத்தை எங்கு டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று யோசித் துக்கொண்டிருக்கும்போதுதன் மோசடி நிதி நிறுவனங்களின் வலையில் விழுகிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் நன்றாக படித்து மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் தெரிந்தே ஏமா்ந்து போவது தான் விசித்திரமாக உள்ளது.
இந்த நிறுவனமும் நம்மை ஏமாற்றத்தான் போகிறது, அதற்குள் நமக்கான வட்டியும் அசலும் வந்து விடும் என்று நினைத்து முதலீடு செய் வோரும் ஏராளம். இவர்களை தவிர தவறான வழிகளில் பெறப்பட்ட பணத்தை காவல்துறை உயர் அதிகாரிக ளும் சமூக விரோதிகளும் இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய் கிறார்கள். சமூகத்தில் பெரிய பொறுப் பில் உள்ளவர்களே முதலீடு செய்யும் போது நாமும் ஏன் செய்யக்கூடாது என்று நினைக்கும் சிலரும் முதலீடு செய்து ஏமா்ந்து போகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வு வங்கி அனுமதியுடன் செயல்படும் வங்கி அல்லாத நிதிநிறுவனமா? இதில் முதலீடு செய்தால் பாதுகாப்பானதா என்பதை கூட அறிந்து கொள்ள மக்க ளுக்கு நேரம் இல்லை. ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்றும் தங்க நாணயம் கிடைக்கும் என இந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திரு வண்ணாமலை என பல மாவட்டங்க ளில் ஏராளமானோர் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்தனர். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டுக்கு எப்படி அந்த நிறுவனத்தால் இவ்வ ளவு தொகையை வழங்க முடியுமா? இப்படி நிதியைத் திரட்டும் நிறுவனம் எந்தெந்த வகையில் வருமானம் ஈட்டித்தரும் என்பது குறித்தெல்லாம் யோசித்துப் பார்ப்பதில்லை. இத்தகைய திட்டங்களுடன் தொடங் கப்பட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள், மூட்டை மூட்டையாகப் பணத்தை சுருட்டிக்கொண்டு காணாமல் போனதுதான் மிச்சம்.
பணம் பறிமுதல்
இந்நிலையில் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொது மக்களை ஏமாற்றி வருவதாக எழுந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஒரிரு நாட்களுக்கு முன்னர் திடீர் சோதனை நடத்தி 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்ததுடன் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். அதிக டெபாசிட் பெறப்பட்ட தாக கூறப்படும் சென்னை அமைந்த கரையில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்திலும் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 11 மணி நேரத் திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை யில் பல ஆவணங்களை கைப்பற்றிய தோடு அந்த அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர். அதேபோல் திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு ஆதிகே சவ பெருமாள் கோவில் தெருவில் இயங்கி வந்த ஆருத்ரா நிறுவனத்திற் கும் சீல் வைக்கப்பட்டது. திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள விளங்காடு கிராமத்தில் உள்ள ஆருத்ரா நிறுவனத் தின் உரிமையாளர் ராஜசேகரின் உறவினரான மணிகண்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 25 ஆயிரம் ரூபாய், 312 கிராம் தங்க நகை, 650 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.பழனி செய்தியா ளர்களிடம் பேசுகையில், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ஆரணி கிளை தொடங்கிய 18 நாட்களில் 107 வாடிக்கை யாளர்கள் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விரைவில் கைது செய்வோம். ஆனாலும் பொதுமக்கள் இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். தற்போது ஆருத்ரா கோல்டு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள வாட்ஸ் அப் செய்தியில் யாரும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டாம். உங்களது பணம் திரும்ப கிடைக்கும். புகார் செய்து விட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்து எல்லா பண பரிவர்த்தனை களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கி விடுவார்கள் என்று அதில் சொல்லப்பட்டுள்ளதாம்.
சிந்திக்க வேண்டியவை
ஒரு லட்ச ரூபாய் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டால் மாதம் 330 ரூபாய்தான் கிடைக்கும். இது 4 ரூபாய் வட்டி. நிலையான வைப்பு (பிக்சட் டெபாசிட்) திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் 460 ரூபாய் கிடைக்கும். இது 5.5 ரூபாய் வட்டி. மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட வகையில் முதலீடு செய்தால் மாதம் 1,000 ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது 12 ரூபாய் வட்டி (இது பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கூடவோ, குறையவோ செய்யும்). இத்தகைய சூழலில், மாதம் 30,000 ரூபாய் தருவதாக என்று சொல்வதை எப்படி நம்பமுடியம். அப்படியே கொடுத்தாலும் ஒரு காலகட்டம் வரைதான் கொடுக்கமுடியும். கவர்ச்சி கரமான திட்டங்களைக் கூறி பொது மக்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு அனுமதி கிடையாது. அப்படி நிதி திரட்டுவது என்றால், ரிசர்வ் வங்கியின் உத்தரவாதத்துடன் கூடிய பத்திரம் என்ற வகையில்தான் நிதி திரட்ட வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து பெருக்க வேண்டும் என்பது சரியான முடிவே. அதை முறையான வகையில் முதலீடு செய்தால் பிரச்சனை இல்லை. ஆனால் குறுகிய காலத்தில் அதிக வருமானம் வேண்டும் என நினைத்து, மோசடி நிறுவனங்களில் பணத்தை இழப்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு முதலீட்டுத் திட்டம் பற்றி உங்க ளுக்குத் தெரியவந்தால், அந்தத் திட்டம் பற்றி முதலில் நன்கு விசாரியுங்கள். யார் அந்நிறுவனத்தின் உரிமையாளர்? எதற்காக இந்த முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்? எப்படி இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது என அனைத்தையும் அலசி ஆராய வேண்டும்.
முதலீட்டை வாங்கும் நிறுவனம், அரசாங்கத்திடம் முறையாக பதிவு பெற்ற நிறுவனம்தானா? முதலீடு களை வாங்குவதற்குரிய தனியான அனுமதிகளைப் பெற்றுள்ள நிறுவனம் தானா? அதன் உரிமையாளர் தவறான பின்னணி ஏதும் இல்லாத நபர்தானா? ஏற்கெனவே ஈமு கோழி, காந்தப் படுக்கை, இரிடியம் என்று மோசடி திட்டங்களை நடத்தி, மக்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி மீண்டும் வேறு பெயரில் மோசடியில் இறங்கி இருக்கிறாரா? முதலீட்டுக்கு, சம்பந்தபட்ட நிறுவனம் தருவதாகச் சொல்லும் வட்டித்தொகை, நியாய மான வட்டி தொகைதானா?
குறிப்பிடப்படும் வட்டித் தொகையா னது, நாம் முதலீடு செய்யும் தொகையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையான வகையில் முதலீடு செய்து வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனம் தானா? மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடும் கவர்ச்சிகரமான வட்டி உள்ளிட்ட அம்சங்கள் இல்லாமல் நிதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரட்டுகிறதா என்பதையெல்லாம் பலமுறை ஆராய்ந்து, பிறகு முதலீடு செய்வது குறித்து யோசிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இத்தகைய நிறுவனங்களிடம் சிக்கி பணத்தை இழக்காமலிருக்க மேற் கண்ட கேள்விகள் உங்களது மனதில் கேட்டுககொண்டே இருக்கவேண்டும். இல்லைஎன்றால் ஒருநிறுவனம் போய் மற்றொரு நிறுவனம் மூளைத்துக் கொண்டே இருக்கும். காவல்துறை யும் மாநில அரசும் இதுபோன்ற நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும், நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை அள்ளி வீசும்போதே அரசும் காவல்துறையும் உஷாராக வேண்டும். பொதுமக்களை இது போன்ற மோசடி நிறுவனங்களிட மிருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப் பும் கடமையும் அரசுக்கு உள்ளது.