tamilnadu

img

கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது

வீட்டில் கார், ஏசி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு, மானிய விலையில், சமையல் பொருட்களை வழங்கும் ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மானிய விலையில் பொருட்களை பெற்று வருவதாக கூறி, இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி, நான்கு சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துள்ள குடும்பங்கள், வீட்டில் ஏசி வைத்திருக்கும் குடும்பங்கள், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்தும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நபர்கள் உள்ள குடும்பங்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளுடன் இருக்கும் கான்கிரீட் வீடுகளைக் கொண்ட குடும்பங்கள், வணிக நிறுவனங்களை பதிவு செய்து வைத்துள்ள குடும்பங்கள், அனைத்து வகை ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி பெறும் குடும்பங்கள் ஆகியோருக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பலருக்கு ரேஷன் அட்டை சலுகைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.