tamilnadu

img

காவிரியில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

பெங்களூரு, ஆக. 2-  கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரு வதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு வெள்ளியன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  ஏற்கனவே ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் காவிரியில் 9.5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகின்ற 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.  இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேன க்கல்லில் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 9,900 கனஅடியாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, அங்கு பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9,900 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட் டம் 50 அடியை நெருங்குவ தால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.