tamilnadu

img

நீலகிரி உள்பட  3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் அடுத்த மூன்று மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப் பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித் துள்ளது.நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு  நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில்கன மழையும், ஏனைய மேற்குத்  தொடர்ச்சிமலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின்சில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.