tamilnadu

img

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் வரும் நவம்பர் 15ம்  தேதி முதல் அமல்படுத்தப்படும். இட்லி, கிச்சடி, பொங்கல் போன்றவை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.