tamilnadu

img

அதானி நிறுவனம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு! மின்கட்டணம் ரூ. 1 லட்சமா? நடிகை கார்த்திகா அதிர்ச்சி!

மும்பை, ஜூன் 26 - பொது முடக்க கால கட்டத்தில் மின்சார வாரியம் அதிக மின்கட்டணம் வசூலிப்பதாக, நாடு முழுவதும் குற்றச்சாட்டு கள் இருந்து வருகின்றன.  இந்நிலையில், தனது வீட்டுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் மின்கட்டணம் என்று பில் வந்ததைக் கண்டு, நடிகை கார்த்திகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது மிகப்பெரிய மோசடி என்று டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துப்பதிவிட்டுள்ளார். ‘கோ’ படத்தின் மூலம் தமிழ்ச்  சினிமாவில் அறிமுகமாகி, புறம் போக்கு அல்லது பொதுவுடமை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை  கார்த்திகா. பிரபல நடிகை ராதாவின் மக ளான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி களில் நடித்து வருகிறார்.

தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு ஜூன் மாதத்திற்கு மட்டும் ரூ. 1 லட்சம் மின்கட்ட ணம் நிர்ணயிக்கப்பட்டு இரு ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், இவ்விஷயத்தில் அதானி நிறுவனம் மிகப்பெரிய மோசடி செய்திருப்ப தாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி யுள்ளார். “அதானி மின்சார (Adani Electricity) நிறுவனத்தினர், என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், தோராய கணக்குப்படி ஜூன் மாதத்துக்கான மின்சார பில், ஒரு லட்சம் ரூபாய்க்கு அருகில் உள்ளது.. மும்பையில் இருக்கும் வேறு சிலரும் இது போன்ற புகார்களை என்னிடம் கூறி வருகின்றனர்” என்று டுவிட்டர் அவர் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.