தஞ்சாவூர், ஜூலை 28 - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவி யல் பட்டப்படிப்புகள் (தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முது நிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு (தமிழ், வரலாறு) முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்ப டிப்புகளுக்கு பிளஸ் 2 படித்தவர்கள் விண்ண ப்பிக்கலாம். ஐந்தாண்டு முதுகலைப் படி ப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் இள நிலைப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம். முது கலைத் தமிழ் பயிலும் 20 மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (ஐந்தா ண்டு) பயிலும் 25 மாணவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகையாக தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்ப டுகிறது. கல்வி உதவித்தொகை மதிப்பெ ண்கள் அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாண்டு முதல் மாணவ சேர்க்கை இணைய வழியாகவும் நடைபெறுகிறது. மாணவர்கள் www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப த்தினை இணைய வழியாக நிறைவு செய்து அனுப்பலாம். பதிவிறக்கம் செய்து நிறைவு செய்து அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.