தஞ்சாவூர், ஆக.24- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் (இருபா லர்) கல்லூரியில் மாண வர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனை வர் நா.தனராஜன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: “பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் 2020-21 ஆம் கல்வி யாண்டிற்கான, மாணவர் சேர்க்கை ஆக.28 முதல் செப்.4 ஆம் தேதி வரை நடை பெறும். இணைய வழியில் விண்ணப்பித்த மாணவர்க ளின் தர வரிசைப்படி (ரேங்க் லிஸ்ட்) தற்காலிக மாணவர் சேர்க்கைப் பட்டியல் தயா ரிக்கப்பட்டு தெரிவு செய்ய ப்பட்ட மாணவர்களுக்கு செல்போன், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும். மாணவர்கள் மட்டும் சேர்க்கையின் போது வருகை தந்தால் போதுமா னது. பெற்றோர், பாதுகாவ லர் கல்லூரிக்கு வருதல் கூடாது. அதற்கு அனுமதி கிடையாது. ஆகஸ்ட் 28 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சிறப்பு ஒதுக்கீ ட்டு இடங்களுக்கு (விளை யாட்டு, மாற்றுத்திறனாளி கள், என்சிசி முதலானவை) சேர்க்கை நடைபெறும். ஆக.29 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பி.எஸ்.சி., கணினிஅறிவியல், பி.எஸ்.சி, இயற்பியல் பாடப் பிரிவுக ளுக்கும், மதியம் 2 மணிக்கு பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., வேதியியல் பாடப்பி ரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆக.31 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு பி.காம்., வகுப்பிற்கும், மதியம் 2 மணி க்கு பி.பி.ஏ., வகுப்பிற்கும், செப்டம்பர் 1 (செவ்வாய்க்கி ழமை) காலை பி.ஏ., தமிழ் வகுப்பிற்கும், மதியம் பி.ஏ., ஆங்கில வகுப்பிற்கும் மாண வர் சேர்க்கை நடைபெறும். இரண்டாம் கட்ட மாண வர் சேர்க்கை செப்டம்பர் 2 (புதன்கிழமை) அன்று பி.எஸ்.சி., அனைத்து அறிவி யல் பாடப் பிரிவுகளுக்கும், செப்டம்பர் 3 (வியா ழக்கிழமை) அனைத்து கலைப் பிரிவுகளுக்கும் காலி யாக உள்ள இடங்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பித்த மாணவர்கள் உரிய நாளில் நேரில் வருகை தந்து சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்த்த பின்னர், உரிய கல்லூரி கட்டணம் செலுத்தி ரசீது பெற்றால் மட்டுமே அவர்களின் சேர்க்கை உறு தியாகும். சேர்க்கைக்காக கல்லூ ரிக்கு வரும் போது மாணவர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு களின் மதிப்பெண் பட்டி யல்கள், சாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டிசி) சிறப்பு ஒதுக்கீட்டி ற்கான சான்றிதழ், பாஸ்போ ர்ட் அளவு புகைப்படம் -2, இணையத்தில் விண்ணப்பி த்த விண்ணப்ப நகல் ஆகி யவற்றின் அசல் மற்றும் அனைத்து சான்றுகளின் 2 நகல்கள் மற்றும் கல்விக் கட்ட ணம் ரூ.2,600 (பாடப்பிரி வுகளுக்கு ஏற்ப தொகை சற்றே மாறுபடலாம்) ஆகிய வற்றுடன் வருகை தருதல் வேண்டும். சுகாதாரத்துறை அறிவிப்புக்கு ஏற்ப மாண வர்கள் கட்டாயம் முகக் கவ சம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பி டித்து கலந்து கொள்ள வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வருகை தரும் மாண வர்கள் கொரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதை உணர்ந்து, அமைதி யாகவும், ஒழுக்கத்தோடும், இடைவெளியை பின்பற்றி யும் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இணையம் வழி யாக, ஏற்கனவே விண்ண ப்பித்த மாணவர்கள் மட்டுமே மாணவர் சேர்க்கை யில் கலந்து கொள்ள முடி யும்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.