தஞ்சாவூர், மே 31- வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து, ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாக தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் முகாமில் உள்ள வர்களை சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கேட்டறிந்தார். சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பிச் செல்ல நடவடிக்கை யும், அதுவரை, அவர்களுக்கு தேவை யான அத்தியாவசிய வசதிகளை செய்து தருமாறும் அலுவலர்களிடம் ஆட்சியர் உத்தரவிட்டார்.