மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரக்குழு சார்பில் மங்களபுரம் பகுதியில் கட்சி நிதி வசூல் இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது. மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்தசாமி, மாநகரக்குழு உறுப்பினர்கள் வடிவேலன், வசந்தி மற்றும் விஜயகுமார் ஆகியோர் வீடு வீடாகச் சென்று கட்சி நிதி வசூல் செய்தனர்.