tamilnadu

img

பாபநாசம்- சாலியமங்கலம்  சாலைப் பணி ஆய்வு

 கும்பகோணம் ஆக.24-  தஞ்சை மாவட்டம் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையை ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இப்பணி நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெறுகிறது.  இப்பணியை திருச்சி மண்டல தரக் கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் நிர்மலா, தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு தார்ச் சாலையின் தரம் மற்றும் கனம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சமய சக்தி, பாபநாசம் உதவி கோட்ட பொறியாளர் இந்திராகாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.