tamilnadu

img

வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் விருது பெற்ற தஞ்சை இளைஞர்

தஞ்சாவூர், ஆக.24 – தஞ்சையில் நீரில்  மூழ்கிய 6 பேரை காப்பா ற்றிய இளைஞர், வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் ஜீவன் ரக்‌ஷா பதக் விருதை, திங்கட்கிழமை முத ல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ஸ்ரீதர்(22), பி.டெக்., படித்து விட்டு விவ சாயத்தில், அப்பாவுக்கு துணையாக இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்பகுதியில் உள்ள வெள்ளையன் ஏரி வழியாக ஸ்ரீதர் வந்து கொண்டிருந்த போது, ஏரித் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த 2  பெண்கள், 4 குழந்தைகள் என 6 பேரையும், ஒவ்வொ ருவராக இழுத்துக் கொண்டு வந்து கரை சேர்த்தார். நீச்ச லில் எவ்வித முறையான பயிற்சியும் இல்லாத நிலையில், தனது  உயிரை பணயம் வைத்து, 6 உயிர்களைக் காப்பாற்றிய ஸ்ரீதரை  பலரும் பாராட்டினர். இந்நிலையில் ஸ்ரீதரின் வீர தீரச் செயலை பாராட்டிய தமி ழக அரசு, கடந்த 2019-ல் குடியரசு தினத்தில், அவருக்கு வீர  தீரச் செயலுக்காக தமிழக அரசால் வழங்கப்படும், அண்ணா  விருதினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், தமிழக அரசு சார்பில், மத்திய அரசால் வீர தீரச் செயலுக்காக வழங்கப்படும், “ஜீவன் ரக்‌ஷா பதக்”, விரு திற்காக ஸ்ரீதர் பரிந்துரை செய்யப்பட்டார். அந்த விரு திற்காக குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார். மத்திய  அரசின் விருது ஸ்ரீதருக்கு கிடைத்த நிலையில், திங்கட்கி ழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செய லகத்தில் ஸ்ரீதருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக் விருதையும், ஒரு  லட்சத்திற்கான காசோலையும் வழங்கிப் பாராட்டினர்.