தனியார் பள்ளி வேன் விபத்து 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்
தஞ்சாவூர், நவ.3- திருச்சிற்றம்பலம் அருகே சனிக்கிழமை இரவு தனியார் பள்ளி வேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம். நெடுவாசல் கிராமம் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் வைர வேல் (வயது 14). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் முகேஷ்(14) என்பவரும் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் 2 பேர் மற்றும் கொத்தனார் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லத்தரசு ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெடுவாசல் கிரா மத்திற்கு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்று கொண்டி ருந்தனர். அப்பொழுது நெடுவாசல் கிராமத்தில் பள்ளி மாண வர்களை இறக்கி விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு தனி யார் பள்ளி வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த வைரவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முகேஷ், வல்லத் தரசு ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி வல்லத்தரசு ஞாயிற்றுக்கிழமை உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட தனி யார் பள்ளி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் இறந்த மாணவரின் உறவினர்கள் திருச்சிற்றம்பலம் தனி யார் பள்ளியை முற்றுகையிட்டு ஞாயிறு அன்று போராட்டம் நடத்தினர்.
மதுரை மேலூரில் விபத்து சென்னை மாணவர்கள் காயம்
மதுரை, நவ.3-மதுரை மாவட்டம் மேலூரில் ஞாயிறன்று நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை வண்டலூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காயமடைந்தனர். சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி யைச் சேர்ந்த மாணவர்கள், உடன் பயிலும் மாணவரின் சகோ தரி திருமணம் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள வலையபட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக 15-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் மூன்று கார்களில் வந்துள்ளனர், திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சென்னை புறப்பட்டுள்ளனர். மூன்று கார்களில் ஒரு கார் மதுரை மேலூர் முனிக்கோவில் அருகே வந்த போது அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதுவதைத் தவிர்க்க பிரக் பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த நிவேதா, சந்தோஷ், நவின், வித்யா, மனோஜ், அக்ஷா உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.