தஞ்சாவூர், நவ.19- பேராவூரணி வட்டார லேத் அண்ட் வெல்டிங் கம்பெனி உரிமையாளர்கள் சங்க துவக்க விழா திங்கள் கிழமை பேரா வூரணியில் நடைபெற்றது. பேராவூரணி நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் புதிய சங்கத்தை துவக்கி வைத்து பேசினார். அன்னை கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க பொதுச்செயலாளர் வ. மனோகரன் பேசினார். வர்த்தக கழகச் செயலாளர் ஏ.டி.எஸ் குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர் அலி, தொழிலதிபர் கிரில் நீல கண்டன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் தலைவராக எம். துரையரசன், துணைத் தலைவராக டி.பெரமையன், பொருளாளராக அ.வே.கோபாலகிருஷ்ணன், செயலாளராக ஏ.புஷ்பராஜ், இணைச் செயலாளராக எம். துரை உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் பேராவூரணி, பூக்கொல்லை, ரெண்டாம் புலிக்காடு, கட்டுமாவடி, நாடியம், திருச்சிற்றம் பலம், சொர்ணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெல்டிங் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.