tamilnadu

img

விவசாயிகளுக்கு கவுரவிப்பு

  கும்பகோணம், மே 18-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தியில் தங்களை தளராமல் விவசாய பணிகளில் ஈடுபட்ட விவசாயிகளை பாராட்டும் நிகழ்ச்சி பாபநாசம் ஒன்றியம் பெருமாங்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.எம்.காதர் ஹுசேன் தலைமையில் பெருமாங்குடியில் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கஸ்தூரி பாய், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வி.முரளிதரன், துணை செயலாளர் கார்த்தி, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் இளங்கோவன், உமாபதி ஆகியோர் விவசாயிகளை பாராட்டி கவுரவித்தனர்.