tamilnadu

பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து தரக் கோரிக்கை

 தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத் தூர் கிராமத்தில், ஆற்றுப் பாலம் அருகில் ஆரம்ப கால த்தில் நிறுவப்பட்ட மின் மாற்றி உள்ளது. இது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேத மடைந்தது. இந்த மின்மாற்றி யில் இருந்து தான் குடிநீர் இணைப்புக்கான மின் இணைப்பு செல்கிறது. தற் சமயம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக் கான மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் மட்டும் நடை பெறுகிறது.  ஆனால், இந்த மின் மாற்றி வழியாக விவசாய பம்புசெட்டுகளுக்கு வழங் கப்படும் மின் விநியோகம் இன்னும் கொடுக்கப்பட வில்லை.  இதனால், இப்பகுதியில் நடைபெற்று வரும் விவ சாயப் பணிகள் அனைத்தும் பெரும் பாதிப்ப்பில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்மாற்றியை பழுது நீக்கி 126 கே.வி திறனுள்ளதாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப் பகுதி விவசாயிகள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரிக ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.