tamilnadu

பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையில் முறைகேடு: செயலாளர் இடைநீக்கம்

தஞ்சாவூர், ஆக.31- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர்க் காப்பீடு மற்றும் காப்பீடு இழப்பீட்டுத் தொகையில் முறை கேடு செய்த, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒரத்தநாடு வட்டம், கண்ணுகுடி மேற்கில் தொ டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வரு கிறது. இதன் செயலராக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ராஜலெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த  சங்கத்தில் 2019 ஆம் ஆண்டு விவசாயிகள் பயிர்  காப்பீடு பிரீமியம் செலுத்தியதிலும், விவசாயிகளு க்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கியதிலும் சுமார் ரூ.24 லட்சம் முறைகேடு நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களின் பட்டுக்கோட்டை சரக துணைப் பதி வாளர் ஜெயபாலன், ராஜலட்சுமியை பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் பட்டுக்கோ ட்டை சரக துணைப் பதிவாளர் ஜெயபாலன் கூறுகையில்,  விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகை மற்றும் விவசாயி களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடைபெ ற்றுள்ளதாக எங்களுக்கு வந்த தகவலின் பேரில், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில்  சுமார் ரூ.24 லட்சம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ராஜலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது விசா ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.